/* */

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 35, ஆகிய 36 பதவி இடங்களை நிரப்புவதற்கு தேர்தல் கால அட்டவணை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 20.6.22 முதல் 27.6.22 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகின்றது. வேட்புமனு பரிசீலனை 28 ம் தேதி அன்று நடைபெறும். 30 ஆம் தேதி அன்று பிற்பகல் மூன்று மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

பதிவான வாக்குகளில் எண்ணிக்கை 12 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நன்னடத்தை விதிகள் தேர்தல் முடிவு வரும் நாளான 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...