திமுக முப்பெரும் விழா: திருவண்ணாமலையில் காணொலி மூலம் பார்க்க ஏற்பாடு
சென்னையில் 15ஆம் தேதி நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவை திருவண்ணாமலையில் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எவ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
அதுசமயம் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழாவை காணொளி காட்சி வாயிலாக காணும் வகையில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு, சாரோனின் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் நடைபெறும்.
திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், அனைவரும் வருகிற 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.