/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் அப்பு சிவராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தாஸ் வரவேற்றார். இதில் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முதல்-அமைச்சர் அறிவித்த காசில்லா மருத்துவம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அமைப்பு செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் அருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்