/* */

மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக வினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக வினர் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக.வினர்

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்ட பொருளாளர் நிர்மல் குமார், துணை செயலாளர்கள் உள்பட பலர் முன்னிலை வைத்தனர். திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் தேர்தல் பிரிவு செயலாளர் மணிகண்டன், தொண்டரணி துணை செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதில் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொண்டரணி செயலாளர் பூபாலன் நன்றி கூறினார்.

Updated On: 27 July 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?