Begin typing your search above and press return to search.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: அண்ணாமலையார் கோவில் வெறிச்சோடியது!
கொரோனா தோற்றுப்பரவல் காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா அலையின் இரண்டாவது தாக்கம் வெகுவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இன்று முதல் வழிப்பாட்டு தலங்களின் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, இன்று முதல், திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்றா ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
எனினும், அனுதினமும் நடைபெறும் 6 கால பூஜைகள் தடையின்றி சிவாச்சாரியார்களால் நடைபெறும். இதனையடுத்து திருக்கோயிலின் நான்கு கோபுர வாயிலில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பக்தர்களை கோயிலின் உள்ளே அனுமதிக்காததால் பக்தர்கள் கோயிலின் ராஜகோபுரம் முன்பாக கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாரை வழிப்பட்டு சென்றனர்.