திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் இருந்து இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அறிவித்திருந்த நிலையில்திருவண்ணாமலையில் இருந்து இன்று முதல் 90% டவுன்பஸ், 65 சதவீதம் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது.
திருவண்ணாமலையில் இருந்து 110 டவுன் பஸ்கள், வெளியூர்களுக்கு 259 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர், சென்னை, திருச்சி, விழுப்புரம், போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டும் செல்லும். அதேபோல் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான கோரிமேடு வரை செல்லும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றப்பட வேண்டும் என பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.