/* */

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
X

 ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அதில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 72 மணி நேரம் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து கலெக்டர் விளக்கினார். மேலும் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, அதன் பிறகு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வாக்குப்பதிவு மையங்களுக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தவிர்த்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே, செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாக்குச்சாவடிகளுக்குள் கொண்டு செல்ல கூடாது என்றார்.

மேலும், வாக்குச்சாவடி மையத்திற்குள் அல்லது வாக்குச்சாவடி மையத்துக்கு அருகில் எவ்வித சட்ட விரோத நடவடிக்கைகளிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை அவர்களுடைய இல்லங்களில் இருந்து வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், செய்யார் உதவி கலெக்டர் பல்லவி வர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான், தேர்தல் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்