/* */

ஆஸ்திரேலியா நாட்டு முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில், ஆஸ்திரேலியா நாட்டு முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆஸ்திரேலியா நாட்டு முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
X

திருவண்ணாமலை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 69). இவருக்கு சொந்தமாக திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள மகாசக்தி நகரில் மாடி வீடு உள்ளது. அந்த வீட்டின் மாடியில், கடந்த 21.12.2019 முதல், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோயப் ஸ்மித் கே ராபர்ட் (60) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார்.

அவர் கடந்த சில மாதங்களாக பணப் பிரச்சினையால், மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இவரின் சுற்றுலா விசாவுக்கான கால அவகாசம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணன் மகாசக்தி நகரில் உள்ள அவரின் வீட்டுக்கு எலக்ட்ரிக் வேலை தொடர்பாக சென்றுள்ளார். அதற்காக ஏணியை எடுக்க மாடிக்கு சென்றபோது, கோயப் ஸ்மித் கே ராபர்ட் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு, அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணியான கோயப் ஸ்மித் கே ராபர்ட் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு