Begin typing your search above and press return to search.
போக்சோ சட்டத்தில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக ஊழியர் கைது
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை தாலுகா மருத்துவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவி, அவரது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் ரமேஷ் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ரமேஷை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.