லால் சலாம் படம் வெற்றி அடைய அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் லால் சலாம் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லால் சலாம் திரைப்படம படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு லால் சலாம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு படப்பிடிப்பை துவங்கினார்கள் . மேலும் இப்படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு விஷாலின் படப்பிடிப்புக் காட்சிகள் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு ஹைதராபாதிலும் திருவண்ணாமலையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
அப்பொழுது படப்பிடிப்புக்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருவண்ணாமலையிலேயே நான்கு நாட்கள் தங்கி இருந்தார். மேலும் திருவண்ணாமலை வேலூர் செல்லும் சாலையில் லால் சலாம் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அப்போது ரஜினியை காண திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரஜினி ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று நடிகர் ரஜினி காரில் ஏறி தங்களுடைய ரசிகர்களுக்கு கை அசைத்தவாறு புறப்பட்டு சென்றார். பின்னர் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
மேலும் லால் சலாம் திரைப்படம் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர், முருகர், அண்ணாமலையார் , உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.