உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
HIGHLIGHTS
ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய வைரஸ்களான கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகியவை பரவுவது கட்டுக்குள் வந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி, இந்து வியாபாரி சங்கம் சார்பில் நெல்லையப்பர் கோவிலில் பிராத்தனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கொடிய வைரஸ் கிருமிகள் மக்களை அண்டாதவாறு காத்தருள வேண்டியும் பிரார்த்தனை செய்து இந்து வியாபாரி சங்கம் சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்காக சிறப்பு அலங்காரத்தில் தங்க தேரில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பதிகம் பாடல் பாடி தங்க தேர் இழுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காசி பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மகாராஜன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.