/* */

நெல்லையில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனம்: மேயர் துவக்கி வைப்பு

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனம்: மேயர் துவக்கி வைப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தலைமையேற்று, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூரியன் எப்.எம். சார்பில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தலைமையேற்று ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் துவக்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் இன்று (26-05-22 )முதல் 30-05-22 வரை ஆகிய 5 நாட்களுக்கு திருநெல்வேலி நகர்புற பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வலம்வர உள்ளது. புகையிலை பயனபடுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து சூரியன் எப்.எம். அறிவிப்பாளர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடையே எடுத்து கூற உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினரும் நியமனகுழு உறுப்பினருமான கோகிலவாணி, எப்.எம். நிலைய மேலாளர் முரளிபாபு, அறிவிப்பாளர்கள் வள்ளிமணவாளன், ஜெபராஜ், நிர்வாக பிரிவை சார்ந்த முத்துராமலிங்கம், விளம்பர பிரிவை சார்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2022 3:23 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்