நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தாெடக்கம்
நெல்லையப்பர் திருக்கோவில் மார்கழி திருவாதிரை ஆருத்ராதரிசன உற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
HIGHLIGHTS
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆருத்ராதரிசனம் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. இங்கு சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி திருவாதிரை ஆருத்ராதரிசன உற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி நெல்லையப்பர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்று சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தின் முன் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அதிகாலையில் பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் 20.12.21அன்று அதிகாலை திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகிய பஞ்ச சபையில் ஒன்றான தாமிர சபையில் வைத்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று தீபாராதனையும். தாமிரசபையில் நடராஜர் திருநடனமும் நடைபெறும். கொடியேற்றத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.