நெல்லையப்பர் கோவிலில் தீப திருவிழாவையாெட்டி சொக்கப்பனை ஏற்றும் வைபவம்
நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இரண்டு நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்றைய தினம் சுவாமி சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருக்கார்த்திகை திருநாளான இன்று காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளாக கோவில் முன்பு அமைந்துள்ள சொக்கப்பனை மூக்கிற்கு ஊர்வலமாக எழுந்தருள செய்தனர். பின்னர் சுவாமி சன்னதி மகாமண்டபத்தில் நேற்றைய தினம் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை தலையில் சுமந்து வந்து சொக்கப்பனை முக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.