நெல்லை: முன்விரோதம் காரணமாக நடந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது
நெல்லை ராஜவள்ளிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த பாபு (45),என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவருக்கும், குளத்தில் மீன் பிடிப்பதில் குத்தகை எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதை மனதில் வைத்துக்கொண்டு கடந்த 26ம் தேதி, சாஸ்தா கோயில் அருகே பாபு சென்று கொண்டிருந்தபோது எதிரிகள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையிலான காவல்துறையினர், ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த கந்தன் (18), கோமதிசங்கர்(18), முருகன்(19), விஜய் (18), சுரேஷ்(18) மற்றும் ஒருநபர் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், இன்று 5 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மற்றொருவர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.