/* */

நெல்லையில் வார்டு 15 முதல் 27 பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கொண்டாநகரம் நீரேற்று நிலைய சீரமைப்பு பணியால் வார்டு 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

HIGHLIGHTS

நெல்லையில் வார்டு 15 முதல் 27 பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
X

திருநெல்வேலி மண்டலம் வார்டு எண் 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 10-05-22 மற்றும் 11-05-22 (செவ்வாய்கிழமை, புதன் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் குடிநீர் வழங்க இயலாது திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் தகவல்.

திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி மண்டல பகுதிக்குட்பட்ட வார்டு எண் 15 முதல் 27 வரையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் 600mm பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உடைப்பு சரி செய்யும் பணி 10-05-2022 அன்று நடைபெற உள்ளதால் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 15 முதல் 27 வரையான பகுதிகளுக்கு 10-05-22 மற்றும் 11-05-22 ஆகிய இரண்டு நாட்கள் (செவ்வாய்கிழமை- புதன்கிழமை) குடிநீர் சரியாக விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்