/* */

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : கனிமொழி எம்பி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி கூறினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : கனிமொழி எம்பி தகவல்
X
தூத்துக்குடி விமானநிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி இன்று தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய ஊழியர்கள், காவலர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி.செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்கள் 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பரவலை குறைக்கும் விதமாக மாவட்டத்தின் அனைத்து துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும், அணைத்து பகுதி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.


தூத்துக்குடியில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர்க்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலைய விரிவாக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி, இரவு நேரங்களில் விமானம் தரை இறங்குவதற்கு வல்லநாடு மலைப்பகுதியில் சமிக்கை டவர் அமைக்கும் பணி, விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவை அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மேலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 July 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...