/* */

தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம் வசூல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதத்தை போலீசார் வசூலித்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம் வசூல்
X

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 111 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 47 பேர், திருச்செந்தூர் 45 பேர், ஸ்ரீவைகுண்டம் 40 பேர், மணியாச்சி 55 பேர், கோவில்பட்டி 84 பேர், விளாத்திகுளம் 51 பேர் மற்றும் சாத்தான்குளம் 28 பேர் என மொத்தம் 461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.92,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 9 பேர், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம், திருச்செந்தூர் தலா ஒருவர் மீதும், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் தலா 3 பேர், மணியாச்சி 2 பேர், கோவில்பட்டி 5 பேர் மற்றும் சாத்தான்குளம் 4 பேர் என மொத்தம் 28 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு என மொத்தம் ரூ. 1,06,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 May 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!