Begin typing your search above and press return to search.
இலங்கைக்கு கடத்த முயன்ற விரளி மஞ்சள் பறிமுதல்
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 டன் விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனையிட்டனர். அப்போது அந்த குடோனில் சுமார் 12 டன் மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருத்தன. மேலும் சுமார் 12 டன் எடையிலான பீடி இலைகளும் அங்கு வைத்திருத்தனர். இதனையடுத்து சிப்காட் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இந்த பொருட்களை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிடிபட்ட விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளின் மதிப்பு பல லட்சம் மதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் மஞ்சள் மூடைகளை ஏற்றி வந்த ஒரு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.