/* */

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
X

திருவாரூர் அருகே சாலை மறியல் செய்த த.மு.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல் பகுதியில் போதிய ஜல்லி மற்றும் தார் இடப்படாததால் முழுமையாக சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளத்தை சரி செய்ய கோரி பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தியும் இதுவரை சரி செய்யப்படவில்லை.

எனவே திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சரி செய்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

Updated On: 31 Oct 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்