திருவாரூர்: களவு போன ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 ஆன்ட்ராய்டு செல் போன்கள் மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில்பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில்மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல்நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போனரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள90 ஆன்ட்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட செல்போன்உரிமையாளர்களை (மனுதார்கள்)இன்று (11.04.2022)மாவட்ட காவல்அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.