திருவாரூரில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தினை விரைந்து மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுகூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார்.
தமிழக முதலமைச்சர் சிந்தையில் உருவான திட்டமான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தினை அறிவித்து அதற்கென தனித்துறையே உருவாக்கி உள்ளார்கள்.
அந்தவகையில், தமிழக முதல்வர் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பபட்டுள்ளது.
அத்தகைய, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா , திட்ட இயக்குநர்.தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) .மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புண்ணியகோட்டி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.