திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மாதத்திற்கு ஒரு முறை என்ற வீதத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்றைய தினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது .இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
அண்மையில் பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்தது .இதற்கான இடுபொருள் நிவாரணத் தொகையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் மீண்டும் நிலப் பரப்பில் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எந்தவிதத்திலும் போதாது எனவும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.