Begin typing your search above and press return to search.
திருவாரூர் நகரில் உள்ள கனரா வங்கி வாசலுக்கு நாகப்பாம்பு வந்ததால் பரபரப்பு
வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரமேஷ், வெங்கடேஷ் இருவரும் நாகப்பாம்பை காயம் இன்றி லாவகமாக பிடித்தனர்
HIGHLIGHTS
திருவாரூர் நகரில், பனகல் சாலையில் கனரா வங்கி இயங்கி வருகிறது. திடிரென வங்கி வாசல் அருகே 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று வந்ததைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரமேஷ், வெங்கடேஷ் இருவரும் நாகப்பாம்பை காயம் இன்றி லாவகமாக பிடித்து பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.வங்கி வாசல் முன்பு பாம்பு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பாம்பை பிடித்தவுடன் நிம்மதியாகச் சென்றனர்.