/* */

மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்

திருவாரூரில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா பயிர்கள், தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்
X

கிடாரங்கொண்டான் கிராமத்தில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மிதப்பதை, கண்ணீருடம் காட்டும் விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இதன் காரணமாக, திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், தண்ணீரில் மிதக்க தொடங்கியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:

கிடாரங்கொண்டான் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களாக பெய்துவரும் மழையால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், நடவு செய்து பத்து நாட்களே ஆன இளம் சம்பா நெற்பயிர்கள் தற்போது மிதக்க தொடங்கிவிட்டன. கூட்டுறவு சங்கங்களில், கடன் கிடைக்காமல் நகைகளை அடகு வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது மழையால் பயிர்கள் மூழ்கி இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம். பாதிப்பு குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து, தமிழக அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கூறினர்.

Updated On: 12 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!