திருவாரூர் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி உரையாடல்
திருவாரூர் மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடல் நடத்தினார்.
HIGHLIGHTS
தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் பதவியேற்று ஒரு வருடத்திற்குள் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்தில் ரூ. 1198 லட்சம் மதிப்பில் 1324 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயன் பெறும் நிலப்பரப்பு மொத்தம் 2 ஆயிரத்து 952 ஏக்கர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் ஏராளமான விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.