/* */

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்கம்

இந்தியாவில் அமைதியான சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சிக்கு சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அர்த்தம்

HIGHLIGHTS

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்கம்
X

திருவாரூரில் நடைபெற்ற பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்க விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கிளை நிர்வாகிகள்

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை துவக்க விழா நடைபெற்றது.

திருவாரூர் தனியார் ஹோட்டலில் பப்ளிக் போலீஸ் இந்தியா என்ற அமைப்பின் திருவாரூர் கிளை துவக்க விழா தமிழக தலைவர் மருத்துவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான எஸ். பாஸ்கரன் பங்கேற்று கிளையைத் தொடங்கி வைத்து பேசியதாவது: வரலாற்று புத்தகத்தை திருப்பி பார்த்தல் எங்கெல்லாம் சட்டத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடுகளெல்லாம் அமைதியான சூழ்நிலையிலேயே இருக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள நிலையை பார்த்தோம். இந்தியாவோடு சுதந்திரம் அடைந்த நாடுகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ புரட்சிகளையும், அரசியல் மாற்றங்களையும், அமைதியின்மையையும் பார்த்துள்ளது .

ஆனால், இந்தியாவிலேயே தொடர்ந்து அமைதியான சூழ்நிலை, பொருளாதார ரீதியாக வளர்ச்சி. இதையெல்லாம் பார்க்கும் போது இங்கே சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். சட்டத்தின் ஆட்சியை சிறப்பு செய்வதற்காகவே இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. விதிமீறல்கள் இருக்கும். அது இல்லை என்று கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு பெரிய நாடு. பெரிய அமைப்புகள் இருக்கிற தேசம். எனவே ஆங்காங்கே விதிமீறல்கள் இருக்கும். அனைவரும் ஒருவர் போல் இருக்க மாட்டார்கள். காவல்துறையை எடுத்துக்கொண்டால், சாத்தான்குளம் நிழலாடுகிறது. இதைப் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, அங்கே இழந்த உரிமையை அல்லது மீறப்பட்ட உரிமையை கேட்பதற்கு மனித உரிமை ஆணையம் இருக்கிறது. இருப்பினும் அந்த இடத்தில் உடனடியாக நிவாரணம் அளிப்பதற்கு, இதுபோன்ற அமைப்புகள் தேவைப்படுகிறது என்றார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான எஸ். பாஸ்கரன்.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் மருத்துவர் செந்தில் , தியாகபாரி , பொருளாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Updated On: 20 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!