/* */

காட்டுப்பன்றி இயற்கை விரட்டி புதிய அறிமுகம்; விவசாயிகளுக்கு இனி நிம்மதி

Wild Boar in Tamil-காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க, இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

காட்டுப்பன்றி இயற்கை விரட்டி புதிய அறிமுகம்; விவசாயிகளுக்கு இனி நிம்மதி
X

பன்றி விரட்டி.

Wild Boar in Tamil-காட்டுப் பன்றிகள் கூட்டமாக, நெல் வயல்களிலும் கரும்பு, வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும் மேய்ந்து, பயிர்களை மிதித்து, நசுக்கி சேதமாக்குகின்றன. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த, விவசாயிகள் பல்வேறு முறைகளில் முள்வேலி, மின்சார வேலி அமைத்தும், வண்ண துணிகளை நிலத்தை சுற்றி கட்டியும் பல்வேறு ரசாயன மருந்துகள் பயன்படுத்தியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல், தோல்வியடைந்தனர் .


தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பட்டுக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் பலரும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பாதிப்பு குறித்து, தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இதனையடுத்து, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மூலம், உயிரியல் முறையில், காட்டு பன்றி விரட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இந்த இயற்கை விரட்டியை பயன்படுத்தி, மூன்று மாதம் வரை காட்டுப்பன்றிகளினால் ஏற்படும் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க முடியும். இயற்கை காட்டு பன்றி விரட்டி, விரிஞ்சிபுரம் கேவிகே மூலம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

காட்டுப்பன்றி விரட்டி பயன்படுத்தும் முறைகள்

ஒரு ஏக்கருக்கு 500 மில்லி காட்டுப்பன்றி விரட்டி தேவைப்படும். பயிர் செய்திருக்கும் நிலத்தை சுற்றி, வரப்பு பகுதிகளில் பத்தடி இடைவெளியில் இரண்டடி உயர குச்சிகளை நட்டு வைக்கவும் .பின்குச்சிகளை 1.5 அடி உயரத்தில் கட்டுக் கம்பி கொண்டு இணைத்து கட்ட வேண்டும்.நடப்பட்டுள்ள குச்சிகளின் இருபுறமும், களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோமியோ கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் மருந்து புட்டிகள் போல, ஐந்து மி.லி., கொள்ளளவு கொண்ட 100 சிறிய டப்பாக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும், ஐந்து மி.லி., அளவு மருந்தினை ஊற்றி, டப்பாவின் நான்கு திசைகளிலும் நான்கு துளைகளை இட்டு, இவற்றை நூல் கொண்டு கட்டி சீரான இடைவெளியில் வயலில் நான்கு திசைகளிலும் நட்டுள்ள கம்புகளில் கட்டி தொங்கவிட வேண்டும். டப்பா சாய்ந்து விடாமல் நேராக கட்ட வேண்டும். இதிலிருந்து வெளிவரும் வாசனை, சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு காட்டுப் பன்றிகள் வராமல் குறைந்தது மூன்று மாதம் வரை தடுக்கும். இதில் உள்ள வாசனை காட்டு பன்றிகளுக்கு பிடிக்காததால், வயல் பக்கம் வருவதில்லை.

எனவே விவசாயிகள் மேற்கண்ட முஐறயில், இயற்கை முறை காட்டுபன்றி விரட்டிகளை பயன்படுத்தி பன்றி தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்கலாம் என, வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் விலை ரூ. 590. தேவைப்படும் விவசாயிகள் பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் விரிஞ்சிபுரம் அவர்களை தொலைபேசி மூலம் 0416-2900242 அல்லது arsvrm@tnau.ac.inஎன்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு பெற்று பயன்பெறலாம். நேரில் சென்று வாங்க இயலாதவர்கள், 700 ரூபாய் இணைய வங்கி மூலம் செலுத்தி தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 9:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சோயா புரதம்..! மேற்கத்திய கட்டுக்கதைகள்..!
  2. வேலைவாய்ப்பு
    இந்தியாவில் சட்டம் பயின்றோருக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம்
  4. நாமக்கல்
    சேந்தமங்கலம் பகுதிகளில் நாளை 15ம் தேதி மின்தடை அறிவிப்பு
  5. அரசியல்
    40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு...
  6. வீடியோ
    🔴LIVE: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள்...
  7. இந்தியா
    ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!
  8. திருத்தணி
    ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு..!
  9. அரசியல்
    திமிர் பிடித்தவர்களை தடுத்து நிறுத்திய ராமர்: பாஜக மீது ஆர்எஸ்எஸ்...
  10. இந்தியா
    ஜெகனை காப்பாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி?