Begin typing your search above and press return to search.
தஞ்சை: கோவை ஆசிரியரை தூக்கிலிடக்கோரி மாணவ - மாணவிகள் போராட்டம்
பாலியல் தொல்லை கொடுத்த கோவை ஆசிரியரை தூக்கிலிடக்கோரி தஞ்சையில் மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை தூக்கிலிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீதி நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாணவிகள் பயிலக்கூடிய பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.