/* */

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் இதுவரை தமிழ்நாட்டில் 33 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

HIGHLIGHTS

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மனித உயிர்களை பழிவாங்கிய ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் இதுவரை தமிழ்நாட்டில் 33 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. இதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவதைக் கண்டித்தும், உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தியும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரவும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் மருத்துவர் ச.சுதந்திர பாரதி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா,வாசன் துணை தலைவர் பிரபாகரன், நிர்வாககுழு உறுப்பினர் மணிகண்டன் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.காரல் மார்க்ஸ், முன்னாள் நிர்வாகிகள் கோ.சக்திவேல், பூபேஷ் குப்தா கண்டன உரையாற்றினர்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Updated On: 13 Dec 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...