தென்காசி: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை இயங்கும் நேரம் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரத்தை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ளார். இது குறித்து, செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
2021-ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, 01.11.2021, 02.11.2021, மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில், தென்காசி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில், காலை 08.00 மணி முதல், இரவு 7.00 மணி வரை குடும்பஅட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படும்.
தீபாவளிக்கு முன்னதாக பொருட்கள் வாங்காதவர்கள், வழங்கம் போல பண்டிகைக் காலம் முடிந்து, 08.11.2021 திங்கட்கிழமை முதல் அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.