ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்று, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், சுமார் 500க்கும் மேற்பட்ட வீர கோடி வெள்ளாளர் சமூகம் குடும்பம் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு, 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதும், தற்போதும் தென்காசி தனி மாவட்டமாக உள்ளபோதும் சாதி சான்றிதழ் வாங்க முடியவில்லை.
இது சம்பந்தமாக, மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜிடம் சாதி சான்றிதழ் வழங்க மனு கொடுக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, நகர செயலாளர் சங்கரன், இளைஞரணி சரவணன் வீரக்கொடி சமுதாய நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் முனியசாமி, இளங்கோ உட்பட பலர் உடனிருந்தனர்.