Begin typing your search above and press return to search.
தென்காசியில் கலெக்டரை சந்திக்க வந்த மாவட்ட கல்வி அதிகாரி உயிரிழப்பு
தென்காசியில் கலெக்டரை சந்திக்க வந்த மாவட்ட கல்வி அதிகாரி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரியாக இருப்பவர் சுப்பிரமணியன் (வயது 56.) இவர் இன்று தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பு ஏற்ற ஆகாசை சந்திக்க வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையில் இருந்தபோது மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த இடத்தில் கல்வி மாவட்ட அதிகாரி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.