மாணவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
இராணிப்பேட்டை காரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
HIGHLIGHTS
இராணிப்பேட்டை அருகே கரையில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையடுத்த மண்டலவாடியைச் சேர்ந்த செந்தில் குமார்(47) உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் அடிக்கடி அப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல்12ம்வகுப்பு வரையில் பயின்று வரும் 46 மாணவர்களை அடிக்கடி மிரட்டி நீண்ட நாட்களாக மாணவர்களுடன் தகாத உறவு வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியில் சொல்லமுடியாமல் அச்சத்தில் இருந்த மாணவர்களின் நடவடிக்கையை சந்தேகித்த பள்ளி கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரித்ததில், மாணவர்கள் உட்ற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரின் செய்கைகளைப் பற்றி தெரிவித்தனர் .
இதனையடுத்து விஜயகுமார் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில் குமாரை கைது செய்து விசாரத்து வருகின்றனர்