தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தல் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களை கண்டறிந்து தேர்தல் பணியில் ஈடுபட அவர்களுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நோக்கமாக இன்று மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் 2091 வீரர்களை கண்டறிந்து அவர்களை அழைப்பு விடுக்கும் பணி தொடங்கிவைத்தார் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ரா. சிவகுமார்.
ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கவிதை ஒன்றை எழுதி கவிதை வடிவில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தக கவிதையினை உள்வாங்க அவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜா அடுத்த முன்னாள் ராணுவத்திற்கான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேண்டி நிர்வாகிகளிடம் அந்த கடிதத்தை வழங்கியுள்ளார்.
அதைப் போன்று மாவட்டம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் வகையில் அந்தக் கடிதங்களை முன்னாள் ராணுவத்தினருக்கு வசிக்கும் இடத்திற்கு சென்று வழங்கப்பட இருக்கிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரருக்கு ஒருவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அழைப்பு கடிதம் வழங்கினார். அருகில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி, ராணிப்பேட்டை பயிற்சி துணை கண்காணிப்பாளர் மற்றும் வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.