புதுக்கோட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நாேய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.
சின்னப்பா நகர், உய்யகொண்டான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளித்து வருவதால் சிறு குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழையானது நேற்று மாலை திடீரென்று மீண்டும் பெய்ய தொடங்கியது இந்த மலையானது மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் பல பகுதிகளில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது
இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். ஓட்ட குளம் சின்னப்பா நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உபரிநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் சின்னப்பா நகர் உய்யக்கொண்டான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50 மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தங்களுடைய சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமம்ப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகளிடம் தகவல் கூறியும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு எந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை என்றும் இதனால் தங்களது குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபயாமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருப்பதற்கும் அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.