/* */

புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது

மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது
X

தோட்டக்கலைத்துறை சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில், சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விருதுகள் வழங்கினார்.

தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல், பண்ணை இயந்திர மயமாக்குதல், நீர் மேலாண்மையில் ஊடு பயிர், கலப்பு பயிர், பல அடுக்குப் பயிர் முறைகளை பின்பற்றுதல், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடி செய்யும் சிறந்த விவசாயி களுக்கு சான்றிதழ்களுடன் கூடிய ரொக்கப் பரிசு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.15,000 -மும், குளவாய்பட்டியை சேர்ந்த அர்ஜுனன் என்ற விவசாயிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000 -மும், காடம்பட்டியை சேர்ந்த சாந்தி என்ற விவசாயிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000 -மும் என மொத்தம் ரூ.30,000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, உதவி இயக்குநர்கள் மா. கார்த்தி ப்ரியா (புதுக்கோட்டை), ஏ.காளிசரண் (கறம்பக்குடி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்