/* */

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
X

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு

புதுக்கோட்டை நகராட்சி என்பது நூற்றாண்டு கண்ட நகராட்சி ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி தொடங்கப்பட்டு 109 ஆண்டுகளாகிறது.

2006 முதல் 2011 வரை புதுக்கோட்டை நகராட்சி தலைவராக திமுக-வை சேர்ந்த ராமதிலகம் உடையப்பன் இருந்துள்ளார். அதன்பிறகு தற்போதுதான் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் இரண்டாவது பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்

புதுக்கோட்டை நகராட்சி பொருத்தவரை 42 வார்டுகள் உள்ளன 42 வார்டுகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்கள் 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள் 17 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்

இந்நிலையில் 42 வார்டுகளில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சித் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள பெண் நகராட்சித் தலைவருக்கு அதிக சவால்கள் உள்ளதாக பலமுறை நகராட்சி கவுன்சிலர்களாக இருந்தவர்களும் அரசியல் கருத்தாளர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சிக்கி தவிக்கிறது மேலும் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்தும் அனைத்து வீடுகளுக்கும் இன்னும் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது மேலும் சுகாதார சீர்கேடு என்பது புதுக்கோட்டை நகராட்சி அதிக அளவு உள்ளது

மேலும் நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் அதிக அளவு உள்ளது அதனை வசூல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோன்று ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் இருப்பதால் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு தேர்தலில் நிற்கும் பெண் உறுப்பினர்கள் தற்போது தங்களை தயார்படுத்தும் பணியில் இறங்க வேண்டும். அப்போதுதான் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பெண் தலைவர்கள் சுமூகமாக செயல்படும் நிலை ஏற்படும் இல்லை என்றால் தலைவர் பதவி அவர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 20 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’