புதுக்கோட்டையில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழக அரசு வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இருக்கும் முழு ஊரடங்கி அத்தியாவசிய பொருட்களான பால் மருந்தகம் உள்ளிட்டவைகள் மட்டும் செயல்படும் என அறிவித்திருந்தார்
அதேபோல் மக்களுக்கு தேவையான காய்கறிகள் அரசாங்கத்தின் மூலம் நடமாடும் வாகனங்களில் அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் நேத்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதன் படி இன்று புதுக்கோட்டை கீழ3ம் வீதியிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கொரோனா சிறப்பு நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தைசட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா உமா மகேஸ்வரி, கோட்டாட்சியர் டைசி குமார் , நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன்,முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட திமுக மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்
இன்று துவங்கப்படும் இந்த நடமாடும் காய்கறி வாகனம் வரும் திங்கட்கிழமை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் காய்கறி வாகனம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.