/* */

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கண்பார்வையற்ற சங்கர் வீட்டிற்கு வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு மருத்துவமனை அருகே மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கர் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் காவல்துறைக்கு புகார் தெரிவித்தாரம். காவல்துறையினர் அந்த தொலைபேசி நம்பரை கண்டுபிடித்து சங்கர் வீட்டிற்கு வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் காயம் அடைந்த மாற்றத்தினால் இளைஞர் சங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காவல்துறையினர் 3 பேர் மாற்றுத்தினாளி இளைஞர் சங்கரை தாக்கிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மாற்று திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய காவலர்களை கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 20க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் சங்கரை தாக்கிய 3 காவலர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 18 March 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!