மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம்: விழிப்புணர்வு பணிமனை பயிற்சி நிறைவு
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது
HIGHLIGHTS
மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயண பணிமனை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயண பணிமனை பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலக மாடியில் செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
பயிற்சியின் முதல்நாளில் ஊர்கூடுதே பாடல் ,குறுஞ்செய்தி நாடகம் பயிற்சி அளிக்கப்பட்டது.இரண்டாம்நாளில் தந்தனா தாளம் போடுங்க பாடல், மஞ்சள், குங்குமம் கொண்டாட பாடல், சிலேட் நாடகம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பயிற்சியின்நிறைவு நாளான மூன்றாம் நாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைப்பயணம் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.பின்னர், அவர்களிடம் நன்கு பயிற்சி பெற்று மாவட்டத்தில் சிறப்பான முறையில் பொதுமக்களிடத்தில் கற்போம் எழுதுவோம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதில்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில்,புதுக்கோட்டை மாவட்ட விடியல் கலைக்குழுவினர் 5 பேர்,சிவகங்கை மாவட்டம் அறிவொளி கலைக்குழுவினர் 5 பேர் என மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின்கருத்தாளர்களாக மாணிக்கம்,கண்ணன்,சுதாகர்,ரெக்ஸ் ஆகியோர் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.