Begin typing your search above and press return to search.
மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டையில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் ஆக நாளை முதல் செயல்பட இருக்கிறது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து காய்கறி வாங்கி செல்ல நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இரவு நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கிச் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.