புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் விளையாடி மகிழும் குழந்தைகள்
புதுக்கோட்டை நகராட்சி சத்தியமூர்த்தி பூங்காவில் குடும்பத்துடன் விளையாடி மகிழும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நகராட்சி சத்தியமூர்த்தி பூங்கா கடந்த அதிமுக ஆட்சியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் wi-fi வசதி மற்றும் பல்வேறு தொழில் நுட்பத்துடன் குழந்தைகள் விளையாடி மகிழ கூடிய விதத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் ஆப்பிள், தர்பூசணி, மனிதர்கள் வாய்க்குள் சென்று சறுக்கி விளையாடுவது, மரத்தாலான சரக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத்தில் பூங்கா அமைக்கப்பட்டது.
கெரோனா முழு ஊரடங்கு காரணமாக ஒரு வருடத்திற்கு மேலாக பூங்காக்கள் திறப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து. இந்நிலையில் கடந்த வாரம் பூங்காக்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி பூங்காவில், நகர பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். வைரஸ் தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த குழந்தைகளுடன், தற்போது பூங்காவில் விளையாடி மகிழும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.