மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள்: ஆட்சியர் தகவல்
Awards for those who have worked for the benefit of the disabled
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற10.07.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், ரூ.25,000-ரொக்கபரிசு உடன் கூடிய சான்றிதழ், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000-ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.10,000- ரொக்கப் பரிசுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.10,000- ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக பணியாற்றிய சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் ரூ.10,000- ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் ஆகிய விருதுகள் 15 ஆகஸ்டு 2022 சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
எனவே தகுதியானவர்கள் விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 10.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.