/* */

புதுக்கோட்டையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்

44th Chess Olympiad Celebration at Pudukkottai

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்
X

புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டையில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளியில் 44வதுசதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கான சதுரங்க போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

போட்டியினை மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளிநிர்வாகி ஜோனத்தன் ஜெயபரதன் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சதுரங்க துணைத் தலைவர் அடைக்கலவன் தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் முன்னிலை வைத்தார் .

போட்டியில் வெற்றி பெற்ற முதல 5 இடம்பிடித்த மாணவிகள் நவசக்தி ராஷ்மிகா ஸ்ரீ கவுசல்யா தாமரைச்செல்வி ,சன்மதி, ஸ்ரீநிதி செல்லப்பா முதல் 5 இடம் பிடித்த மாணவர்கள் கமலேஷ்வர் , விஸ்வநாதன் , சஞ்சித் ஆரீஸ் இம்ரான், நவின் , ரோஹித் தங்கம் சிறுவர் சிறுமிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா விருதுகள் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளை வாழ்த்தி பேசினா.ர் நிகழ்வில் சதுரங்கப் போட்டி நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் ஜெயராமன் அங்கப்பன், புதுகை செல்வம், ஸ்ரீதர், பார்த்திபன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வினிதா செல்வம் நன்றி கூறினார்.

Updated On: 13 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’