தொடர் மழை, வாகனநெரிசல்- பொதுமக்கள் அவதி
பெரம்பலுாரில் தொடர் மழையாலும், வாகன நெரிசல் மிகுந்து காணப்படுவதாலும் மக்கள் திணறி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களாகவே பெரம்பலூர் நகருக்குள் மக்கள் கூட்டம் அதிகமாக புத்தாடை வாங்க ஜவுளிகடைகளுக்கும், பொருட்கள் வாங்க வணிக தளங்களுக்கும், மேலும் நகருக்குள் முக்கிய இடங்களுக்கும் படையெடுத்து வந்த நிலையில் தொடர் மழையாலும் தற்போது இந்த போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுவதாலும் மக்கள் திணறி வருகின்றனர்.நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் முட்டி மோதும் அளவிற்கு நகரின் முக்கிய வீதிகளில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருந்தும் மழை பொழிவால் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பயணம் செய்ய முடியவில்லை எனவும், இப்படியே மழை தொடர்ந்து பெய்தால் பொங்கல் கொண்டாட்டம் ஏமாற்றம் ஆகிவிடும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.