/* */

குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டத்தில் குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (39). மளிகைக் கடை உரிமையாளர். இவர் தனது கடையில் 100 கிலோ குட்காவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் படி மேலும் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பஸ்ஸ்டாப் பகுதியில் கடந்த 9-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஈரோடு மாவட்டம் பவானி வரதநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

குட்கா வழக்கில் கைதான செந்தில் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயா சிங், செந்தில் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகல் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட இருவரிடமும் போலீஸ் மூலம் வழங்கப்பட்டது.

Updated On: 1 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்