நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி தேர்வு 1,147 பேர் பங்கேற்பு: 931 பேர் ஆப்சென்ட்
5 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி போட்டித்தேர்வில், 1,147 பேர் பங்கேற்றனர். 931 பேர் கலந்து கொள்ளவில்லை.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம், இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள, 42 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, குரூப் 7 பி, போட்டித்தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு தெற்கு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய்விகாஸ் மெட்ரிக் பள்ளி என, 5 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு, 2,078 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை தமிழ் மொழி தேர்வும், மதியம், 2 முதல், மாலை 5 மணி வரை, இந்து சமயம் சார்ந்த பொது அறிவுத்தேர்வும் நடந்தது.
தேர்வுக்கு விண்ணப்பித்த, 2,078 பேரில், 1,147 பேர் தேர்வு மட்டுமே எழுதினர். இது, 55.20 சதவீதமாகும். 931 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பாலுசாமி தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போட்டித்தேர்வு மையங்களில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.