ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ஆவணி கிருத்திகையை முன்னிட்டு காலை 8 மணிக்கு, சுவாமிக்கு பால், வெண்ணெய், நெய், தயிர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, காலை 11 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் ஆவணிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.