நாமக்கல் மாவட்டத்தில் 322 பஞ்சாயத்துக்களில் 24ம் தேதி சிறப்பு கிராமசபா கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 322 பஞ்சாயத்துக்களில் 24ம் தேதி சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்சாயத்துக்களில், வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இதில், வறுமையில்லா ஊராட்சி, சமூக பாதுகாப்பு, அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.
அனைத்து வயதினரும், உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், அனைத்து குழந்தைகளும் வாழவும், வளரவும், பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்தல். அனைத்து வீடுகளுக்கும் பயன்படுத்த கூடிய நிலையில், வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல், தரமான குடிநீர் வழங்கும் நிலை, முறையான நீர் மேலாண் மற்றும் வேளாண் பணிகளுக்கு தேவையான நீரை அளித்து, நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுகாத்தல்.
மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோரை முயற்சிகளின் பங்காளர்களாக்கி, அவர்களோடு இணைத்து பணிகளை செய்து முடித்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.